Additional information
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
எம்.கோபாலகிருஷ்ணன்
ஓரு கூடைத் தாழம்பூதமிழினி
₹140
In stock
படித்த பல நாவல்களைக் குறித்த விமர்சனங்கள்,
கவிதைகளை ரசித்துணர்ந்த அனுபவங்கள்,
சில நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள்
எனப் பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.
ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை
இக்கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210ஜெயமோகன்
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது. குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280அஜிதன்
மரணம் என்ற ஒற்றை புள்ளியில் தொட்டுக்கொள்ளும் எட்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மரணத்தை குறித்து பேச எத்தனித்த எல்லா பெரும் கலைஞர்களும் சென்றடைந்தது மீண்டும் வாழ்வுக்கும் உயிர்த்தெழலுக்குமே. இந்த தொகுப்பின் கதைகளிலும் அந்த வளர்ச்சி இயல்பாக நிகழ்ந்துள்ளது. ‘மருபூமி’ என்ற பஷீரை குறித்தான குறுநாவலில் அது முழுமை பெறுகிறது. தமிழில் வெளிவந்த மிக முக்கியமான முதல் தொகுப்புகளில் ஒன்றாக இது அறியப்படும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330ஜெயமோகன்
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே பயணங்கள். சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500ஜெயமோகன்
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹190
Reviews
There are no reviews yet.