About Us

விஷ்ணுபுரம் பதிப்பகம் எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களால் 2021ம் வருடம் கோவையில் துவக்கப்பட்டது.

ஜெயமோகனின் அனைத்து படைப்புகளையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதும் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இதன் நோக்கம்.

எங்களுடைய நூல்கள் மின் நூல் வடிவிலும் அச்சுப் புத்தக வடிவிலும் கிடைக்கும். எதிர்காலத்தில் தொழில்நுட்ப சாத்தியங்கள் மூலம் ஒலிப் புத்தக வடிவிலும் வெளியீடுகள் இருக்கும்.

தமிழின் சமகால படைப்புகள் ஆங்கிலத்திலோ மற்ற இந்திய மொழிகளிலோ தகுந்த கவனம் பெறுவதில்லை. இந்நிலையை மாற்ற தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு தரமான நூல்களை கொண்டு செல்வது எங்களுடைய நீண்ட கால குறிக்கோள்.