Additional information
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
இரவிலி நெடுயுகம் – கவிஞர் அபிவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹100
20%
Out of stock
தமிழின் புதுக்கவிதை மரபில் முன்னோடிகளில் ஒருவரின் இடம் கொண்டவர் அபி. தமிழ் அருவக்கவிதைகளில் நகுலன், பிரமிள் ஆகியோருக்குப்பின் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியவர். தூய அருவக்கவிதைகள் என்னும் வகைமைக்குள் அமையும் முக்கியமான படைப்புக்களை உருவாக்கியவர். கலீல் கிப்ரானின் பாதிப்புடன் எழுதத்தொடங்கிய அபி தனக்கென மொழியையும் வெளிப்பாட்டுமுறையையும் உருவாக்கிக்கொண்டார். காலம், வெளி குறித்த தரிசனங்களை, புறவுலக உணர்வுகளின் வழியாக வெளிப்படுத்தும் அவருடைய கவிதைகள் ஆழ்ந்த தியானவெளிப்பாடுகள்.
அபி (பீ.மு.அபிபுல்லா) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தேனி மாவட்டத்தில் பிறந்து மதுரையில் வாழ்கிறார். 2019ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அபிக்கு வழங்கப்பட்டதை ஒட்டி வெளிவருவது இந்நூல்.
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210சுஷில் குமார்
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி சுட்ட சொல்லு வெலக்கு தாயி சுட்ட சொல்லு வெலக்கு தாயி புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன் பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன் கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன் கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா கொலச்சாமி […]
யாவரும்
₹200ஜெயமோகன்
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிமளிப்பது இதன் சிறப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹2200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210ஜெயமோகன்
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹190
Reviews
There are no reviews yet.