ஜெயமோகன்
Showing 61–72 of 107 results
-
ஜெயமோகன்
உரையாடும் காந்தி – தன்னறம்
முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் […]
தன்னறம்
₹300 -
ஜெயமோகன்
நீர்க்கோலம் – செம்பதிப்பு – கிழக்கு பதிப்பகம்
ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது.
அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் சூடி நின்றிருக்கும் ஒன்றைப்பற்றிய ஆய்வென இந்நாவல் விரிகிறது.கிழக்கு பதிப்பகம்
₹1300 -
ஜெயமோகன், விவேக் ஷன்பேக்
வேங்கைச்சவாரி – தமிழில் ஜெயமோகன் வம்சி
கன்னட மொழியின் முதன்மையான இளைய தலைமுறை எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல், இலக்கியவிமரிசனம் மற்றும் நாடகத்துறையில் புகழ் பெற்றவர். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருது, 1998க்கான சிவராம் காரந்த்விருது ஆகியவற்றை பெற்றவர்.
இக்கதைகளில், நவீன கர்நாடகப் பண்பாட்டின் பல்வேறு அடையாளச் சிக்கல்களையும் உலகமயமாக்கலின் பிரச்சினைகளையும் விவாதிப்பதின் வழியாக தன் தரிசனங்களை அடைந்திருக்கிறார் விவேக்.
அபாரமான வாசிப்புத்தன்மைக் கொண்ட இக்கதைகள் வாசகன் கடந்து செல்லவேண்டிய நுண்ணிய மறுபக்கங்களும் உடையவை.
– ஜெயமோகன்வம்சி புக்ஸ்
₹100 -
ஜெயமோகன்
முதலாவிண் – செம்பதிப்பு
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹350 -
ஜெயமோகன்
காடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்
அதிகாலையின் பொன்வெயில் போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி, அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்கும் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு. மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிதமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹650 -
ஜெயமோகன்
யதி : தத்துவத்தில் கனிதல்
தன்னறம்
₹500 -
ஜெயமோகன்
இன்றைய காந்தி – தமிழினி
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது. உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும்.
ஜெயமோகன் அவரது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும் வெவ்வேறு வாசகர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்களாக கட்டுரைகள் அமைந்துள்ளன. காந்தியைப்பற்றி முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விரிவான ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும் இந்நூல் காந்தியின் கொள்கைகளையும் ஆராய்கிறது. காந்தியின் கனவான கிராம சுயராஜ்யம் போன்றவற்றை இன்றைய சூழலில் வைத்து விவாதிக்கிறது.தமிழினி
₹530 -
ஜெயமோகன்
சொல்வளர்காடு – செம்பதிப்பு கிழக்கு பதிப்பகம்
மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது.. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன நிரப்பிக் கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல். ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும் கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமை செய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.
வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.கிழக்கு பதிப்பகம்
₹1200 -
ஜெயமோகன்
வெள்ளை யானை
பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே. இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹600 -
ஜெயமோகன்
ரப்பர் – விஷ்ணுபுரம் பதிப்பகம்
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹290 -
ஜெயமோகன்
Stories of The True – அறம் ஆங்கிலத்தில் (Paperback)
Containing iconic stories like ‘Elephant Doctor’ and ‘A Hundred Armchairs’, this collection by the great Tamil writer Jeyamohan, brings together twelve inspiring and imaginative narratives, all based on the lives of real people. These stories explore the capacity of humans to hold on to their intrinsic goodness in the face of both the everyday and […]
Juggernaut
₹499 -
ஜெயமோகன்
திசைகளின் நடுவே
திசைகளின் நடுவே என்னும் இந்நூலின் பெயருக்கேற்ப இத்தொகுப்பு எழுதுகையில் நான் என் எதிர்காலத் திசைகளின் நடுவேயுள்ள புள்ளியில்தான் நின்றிருந்தேன். பலவகையான கதைக்கருக்கள், விதவிதமான கூறல்முறைகள் நிரம்பிய தொகுப்பு இது. இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்கச் சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300