Hardcopy
Showing 49–60 of 66 results
-
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125 -
செல்வேந்திரன்
பாலை நிலப் பயணம்
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று
– ஜெயமோகன்
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹120 -
க. மோகனரங்கன்
கல்லாப் பிழை
எழுத்தறிவித்தல்
முன் நடந்தவர்கள்
பதித்த தடத்தில்
எவரெவரோ
ஏற்றிவைத்த
விளக்குகளின்
வெளிச்சத்தில்தான்
இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்…
தமிழினி
₹100 -
சுனில் கிருஷ்ணன்
சமகால சிறுகதைகளின் பரிணாமம்
என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
யாவரும்
₹320 -
நரோபா
எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது
எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். […]
யாவரும்
₹150 -
சா. ராம்குமார்
அகதி
தமிழனி பதிப்பகம் வெளியிட்டுள்ள ராம்குமாரின் அகதி தொகுப்பில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. உறவுகளுக்கிடையிலான ஊசலாட்டம், தன்னகங்காரம்/பாவனை அழியும் கணம், அரசாங்க பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்வு, மனிதர்களின் கீழ்மை மற்றும் கொண்டாட்டம் என பல வகைப்பட்டக் கதைகள். கதைகள் ராம்குமாரின் எளிய நேரடியான கதை சொல்லல் முறையில் எங்கும் துருத்தாமல் செல்கின்றன.
தமிழினி
₹160 -
நரேன்
இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்
யாவரும்
₹350 -
போகன் சங்கர்
திரிபு கால ஞானி
தமிழினி
₹130 -
போகன் சங்கர்
வெறுங்கால் பாதை
இலுப்பை மலர்கள்
கரடிகளின் வயிற்றில்
மதுவாகுவது போல
இவை கவுதைகளாகின்றன.
சூரிய ஒளி
இந் நீர்த்துளிக்குள்
கிடந்து உருளுகிறது.
தமிழினி
₹120 -
சு. வேணுகோபால்
கவிதைத் திறனாய்வு வரலாறு
தமிழினி
₹550 -
சு. வேணுகோபால்
பூமிக்குள் ஓடுகிறது நதி
தமிழினி
₹160 -
சு. வேணுகோபால்
உயிர்ச்சுனை
வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. – […]
தியாகு நூலகம்
₹230