மொழிபெயர்ப்பு நூல்
Showing 1–12 of 41 results
-
அழகிய மணவாளன், பி.கே.பாலகிருஷ்ணன்
நாவலெனும் கலைநிகழ்வு – பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐரோப்பியப் பெருநாவல்களைப் பற்றிய ரசனையும் ஆய்வும் கொண்டவை இக்கட்டுரைகள். அந்நாவல்களின் உள்ளடக்கம் என்ன என்று பாலகிருஷ்ணன் ஆராயவில்லை. மாறாக அவை எப்படி வாழ்க்கையில் இருந்து கலையை உருவாக்குகின்றன என்று ஆராய்கிறார். ஆகவேதான் பல இலக்கிய விமர்சன அலைகள் வந்து சென்றபிறகும் தொடர்ந்து பயிலப்படும் ஒரு மூலநூலாக இது உள்ளது. சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு நிகரான வாசிப்புத்தன்மையை அளிக்கும் நூல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360 -
ஜெயமோகன், முனைவர் வி.ஆர்.சந்திரன்
கொடுங்கோளூர் கண்ணகி
தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஹெச். எஸ். சிவபிரகாஷ்
குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்
எனக்கு ஏன் குரு தேவையாகிறார்? நான் ஏன் தியானம் பழகவேண்டும்? மந்திரங்களினால் என்ன பயன்? ஆன்மீகப் பயிற்ச்சியில் சுவாசம் ஏன் முக்கியமாகிறது? ஆன்மீகப் பாதையில் பாலியலின் இடம் என்ன? அமைதியற்ற மனதை என்ன செய்ய? தன்னையும் உலகையும் புருந்து கொள்வதற்கான இத்தகைய அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிறது குரு. வாயில்கள் எனும் உருவகம் மூலமாக, வாசகர் வெவ்வேறு ‘அறை’களுக்குள் வரவேற்கப்படுகிறார். ஒவ்வொரு அறையிலுமுள்ள ஆன்மீக மெய்மைகளை ஆராயவும் உணரவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியில், இந்த ஆன்மீகக் கருத்துகள் எவ்வாறு […]
நற்றிணை பதிப்பகம்
₹130 -
தெளிவத்தை ஜோசப்
மீன்கள்
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது ‘மீன்கள்’. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை. இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே […]
நற்றிணை பதிப்பகம்
₹100 -
ஆனந்த குமாரசுவாமி (Anandha Kumaraswamy)
இந்தியக் கலையின் நோக்கங்கள்
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரசுவாமி விட்ட இடத்திலிருந்து தாகூர் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். எனினும் தாகூர் அவ்வளவாக முன்னால் செல்லவில்லை. தாகூர் எழுத்தின்வழி மட்டுமே செயல்பட்டார். ஆனால், குமாரசுவாமி ஒரு முழுமையான எழுத்தாளருக்கும் மேலானவராக, பண்பாட்டு வரலாற்றாய்வாளராகவும் இருந்தார். தொல்நூல்கள் மற்றும் அழகியல் சார்ந்து மட்டுமல்லாமல், வரலாற்றின் பிற அம்சங்கள், […]
அழிசி
₹130 -
அனிதா அக்னிஹோத்ரி
உயிர்த்தெழல்
’சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அந்தக் காட்சி அமானுஷ்யமானதாக, தீமைக்கு முன்னறிவிப்பு போல இருந்தது…’ சாதிவெறிப் பின்னணியில் கலைஞனின் இருப்பை, புரட்சிப் பின்னணியில் காதலை, உறவுகளிடையே மோதல்களை, இழப்புகளை சொல்லிச் செல்லும் நாவல். கலையும், காதலும், தாய்மையும் உயிர்த்தெழும் தருணங்களை ஆரவாரமின்றி […]
தமிழ்வெளி
₹320 -
எம்.கோபாலகிருஷ்ணன்
ஆன்டன் செகாவ் கதைகள்
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆண்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழுத்தமான முத்திரை இன்றும் மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதமைக்குச் சான்று. தமிழில் இதுவரை வெளிவராத இக்கதைகள் செகாவின் புனைலகின் மேலும் சில ஆழங்களைத் துலக்கிக் காட்ட வல்லவை.
நூல் வனம்
₹230 -
நித்ய சைதன்ய யதி, யூமா வாசுகி
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி) “இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகளைப் பற்றியான என் புரிதல் அதன்பிறகு மிகவும் மாறிவிட்டது. அறிவெல்லாம் பெரியவர்களின் குத்தகை எனும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை. நான் குழந்தைகளுடன் இருக்கும்போது, அவர்களின் களங்கமற்றதும் சத்தியமுமான அறிவின் முன்னால் […]
தன்னறம்
₹120 -
ஜேனிஸ் பரியத்
நிலத்தில் படகுகள்
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்தக்கதைகள். பலர் மொழிபெயர்ப்பு செய்த இந்த மொத்தக்கதைகளையும், தமிழில் வாசிக்கும்போது ஒரே சீராக வரும்வகையில் மெய்ப்பு நோக்கி கொடுத்ததில் சுசீலாம்மாவின் பங்கு மிக முக்கியமானது.
நற்றிணை பதிப்பகம்
₹350 -
பால்சாக்
தந்தை கோரியோ
சாகித்ய அகாதெமி
₹220 -
பி.கே.பாலகிருஷ்ணன்
இனி நான் உறங்கட்டும்
சாகித்ய அகாதெமி
₹260 -
கே.சிவராம் காரந்த், தி.ப.சித்தலிங்கையா
மண்ணும் மனிதரும் – கே.சிவராம் காரந்த்
சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு,கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை. ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வரும் வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விட்டு நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார். ஆங்கிலக்கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை இதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்க்கை நடத்த முயல்கின்ற பேரனுக்கு இந்த […]
சாகித்ய அகாதெமி
₹485