அபுனைவு
Showing 49–60 of 63 results
-
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ராஜ் கௌதமன் – பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்
பேராசிரியர் ரணஜித் குகாவின் விளிம்புநிலை சமூகஆய்வு, ஃபூக்கோவின் பின்நவீனத்துவ சமூகவியலாய்வு ஆகிய முன்னோடி வழிமுறைகளைக்கொண்டு இங்கு தலித் பண்பாட்டு வரலாற்றாய்வு முறைமை ஒன்றை உருவாக்கிய முன்னோடி. தமிழ்வரலாற்றின் தொடக்கம் முதலே சாதிய ஆதிக்கம் உருவாகி நிலைகொண்ட சித்திரத்தை ஆதாரங்களுடன் விரித்துகாட்டும் அவருடைய ஆய்வுகள் நம்மை நாமே மேலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவக்கூடியவை. அவ்வகையில் தமிழ்ப்பண்பாட்டுக் களத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவை.
தலித் இலக்கியத்தின் முதன்மையான அழகியல்வடிவம், தன்வரலாறு. ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகியவை தமிழின் முதன்மையான தன்வரலாற்றுப் புனைவிலக்கியங்கள். பண்பாட்டாய்வாளர், புனைவெழுத்தாளர் என்னும் ஒரு தளங்களிலும் பெரும்பங்களிப்பாற்றியவர் ராஜ்கௌதமன்.
அவருக்கு 2018ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹150 -
ஜெயமோகன்
எழுதும் கலை
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹190 -
ஜெயமோகன்
புறப்பாடு
அனுபவங்களை காலவாிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வௌயே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வாிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒனறு தென்படும். அது எந்தெந்த […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹600 -
நித்ய சைதன்ய யதி, யூமா வாசுகி
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி) “இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகளைப் பற்றியான என் புரிதல் அதன்பிறகு மிகவும் மாறிவிட்டது. அறிவெல்லாம் பெரியவர்களின் குத்தகை எனும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை. நான் குழந்தைகளுடன் இருக்கும்போது, அவர்களின் களங்கமற்றதும் சத்தியமுமான அறிவின் முன்னால் […]
தன்னறம்
₹120 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
வேடிக்கை பார்ப்பவன் – யுவன் சந்திரசேகருடன் ஓர் உரையாடல்
”ஒழுங்குங்கிறது ஒண்ணு. ஒழுங்கு சிதைவுங்கிறது இன்னோண்ணுன்னு நினைக்கிறோம். ஒழுங்குசிதைவுல ஒரு ஒழுங்கு இருக்கு. குப்பைத் தொட்டிங்கறது அழகானது இல்லன்னு சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு? குப்பைத் தொட்டிகளுக்கே உள்ள ஒரு அழகு இருக்கு. சிதறலோட, கழிவோட அழகு ஒண்ணு இருக்கு. இத நீங்க பாத்துட்டீங்கன்னா, உங்களுக்குப் பிடிச்சது – பிடிக்காதது இருக்கும். ஆனா சமூகத்துக்கு உகந்தது உகந்தது இல்லைன்னு தீர்ப்புச் சொல்கிற ஒரு இடத்துக்கு நீங்க போக மாட்டீங்க. தீர்ப்பு சொல்லாமல் இருக்கிற இடத்தில் இருக்கிறது […]
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
சா. ராம்குமார்
தேவியின் தேசம்
மனிதஇனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புதுமையை நோக்கிய பயணத்தை கனவுகள் தான் வழிநடத்துகின்றன. சில நேரங்களில் தொலைதூரப் பயணங்களை வீரதீரசாகசங்களும் அலங்கரிப்பதுண்டு. அந்த வகையில் தமிழர்களின் கடல் வழி வணிகம் வரலாற்றின் பக்கங்களில் பெருமிதத்தோடு இடம்பெற்றுள்ளதக் காண முடிகிறது. அதேபோல் அந்நிய பண்பாட்டின் தாக்கம் இந்திய மனங்களை ஊடுருவி நிலைத்து நிற்பதும் ஆழமான ஆய்வுக்குரியவை.
தமிழினி
₹170 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மொழி பூக்கும் நிலம்
தமிழினி
₹110 -
எம்.கோபாலகிருஷ்ணன், நித்ய சைதன்ய யதி
அறிவு – ஞானத்தின் ஆய்வியல்
அறிவு – ஞானத்தின் ஆய்வியல் உரை: நித்ய சைதன்ய யதி தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன் ~ அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த […]
தன்னறம்
₹80 -
ராய் மாக்ஸம்
உப்புவேலி
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி. இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது.
தன்னறம்
₹440 -
செல்வேந்திரன்
நகுமோ லேய் பயலே
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹135 -
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125 -
செல்வேந்திரன்
பாலை நிலப் பயணம்
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று
– ஜெயமோகன்
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹120