Additional information
Book Title | |
---|---|
Format | |
Imprint | |
Author | |
Year Published |
ஜெயமோகன்
ஏழாம் உலகம்விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400
In stock
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! “ஏழாம் உலகம்” அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
Book Title | |
---|---|
Format | |
Imprint | |
Author | |
Year Published |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210சுஷில் குமார்
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி சுட்ட சொல்லு வெலக்கு தாயி சுட்ட சொல்லு வெலக்கு தாயி புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன் பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன் கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன் கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா கொலச்சாமி […]
யாவரும்
₹200ஜெயமோகன்
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது. உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும்.
ஜெயமோகன் அவரது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும் வெவ்வேறு வாசகர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்களாக கட்டுரைகள் அமைந்துள்ளன. காந்தியைப்பற்றி முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விரிவான ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும் இந்நூல் காந்தியின் கொள்கைகளையும் ஆராய்கிறது. காந்தியின் கனவான கிராம சுயராஜ்யம் போன்றவற்றை இன்றைய சூழலில் வைத்து விவாதிக்கிறது.
தமிழினி
₹530கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார்
ஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்குக்கயிறு இறுக்கி மூச்சுத் திணறும் ஆராச்சார் புதினம் ஒரு காவியமாக விரிகின்றது. விளிம்புநிலைப் பெண் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்யும் இப்புதினம் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதிக் கோட்பாடுகள், பாலின ஏற்றத்தாழ்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் […]
சாகித்ய அகாதெமி
₹750கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெயமோகன்
மலையாள நவீன கவிஞர்களில் முக்கியமானவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை . இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் முகமாக அறியப்பட்டவர். வசனத்தை சிறப்பாக கவிதையில் பயன்படுத்திய முன்னோடி. களச்செயல்பாட்டாளர், மனித உரிமைப்போராளி. தீவிரமான விமர்சனமும் அங்கதமும் கொண்ட கவிதைகளை எழுதிய கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய நுட்பமான மென்மையான அழகுணர்வுக்காகவும் புகழப்படுபவர். மலையாள கவிதையில் அலட்டல் இல்லாத ஒரு கூறுமுறையைக்கொண்டுவந்தவர். கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு 2019ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூல். மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100
Reviews
There are no reviews yet.