2021
Showing 25–36 of 47 results
-
எம்.கோபாலகிருஷ்ணன்
தீர்த்த யாத்திரை – எம் கோபாலகிருஷ்ணன்
தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் வீடு துறந்து வெளியேறும் ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான். அலைதலும் திரிதலுமான இப்பயணத்தின் முடிவில் அவன் எங்கு சென்று சேர்கிறான் என்பதைச் சொல்லும் புதினம்.
தமிழினி
₹220 -
நாஞ்சில் நாடன்
தொல்குடி
தமிழினி
₹190 -
ஜெயமோகன்
வலசைப் பறவை
ஜெயமோகன் தன் தளத்தில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுதி இது. “நான் இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன். அதை ஒரு மத நம்பிக்கையாக அல்ல. ஒரு நடைமுறை வாய்ப்பாகவே கருதுகிறேன். மாபெரும் மானுடப்பரவல் கொண்ட இந்த நாடு ஒன்றாக இருந்தாலொழிய வளர முடியாது. பிரிந்தால் குருதிப்பெருக்கே எஞ்சும் என நம்புகிறேன். ஆகவே முதன்மையாக பிரிவினை அரசியல் பேசி சுயலாபம் தேடும் குழுக்களை, ஐந்தாம் படையினராகச் செயல்படும் அறிவுஜீவிகளையே முதன்மையாக எதிர்கொள்கிறேன். தமிழ் அறிவுப்புலத்தில் மிகப்பெரிய சக்திகள் இவர்களே. மற்றபடி என் எதிர்வினைகள் எல்லாமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பொதுக் குடிமகனுடையவை மட்டுமே. சாமானியனாக நின்று வரலாற்றை நோக்குவதே என் வழி” என்று ஜெயமோகன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
நற்றிணை பதிப்பகம்
₹125 -
ஜெயமோகன்
ஒருபாலுறவு
தமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் இணைய ஊடகம் வந்த பின்னரே தெரியவந்தது. ஜெயமோகனின் இணையதளத்தில் வந்த கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட இத விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன.
”என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது. நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை” என்று ஜெயமோகன் இவ்வுரையாடலைத் தொகுக்கும்போது குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹90 -
சுனில் கிருஷ்ணன்
விஷக் கிணறு
அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை […]
யாவரும்
₹200 -
சா. ராம்குமார்
தேவியின் தேசம்
மனிதஇனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புதுமையை நோக்கிய பயணத்தை கனவுகள் தான் வழிநடத்துகின்றன. சில நேரங்களில் தொலைதூரப் பயணங்களை வீரதீரசாகசங்களும் அலங்கரிப்பதுண்டு. அந்த வகையில் தமிழர்களின் கடல் வழி வணிகம் வரலாற்றின் பக்கங்களில் பெருமிதத்தோடு இடம்பெற்றுள்ளதக் காண முடிகிறது. அதேபோல் அந்நிய பண்பாட்டின் தாக்கம் இந்திய மனங்களை ஊடுருவி நிலைத்து நிற்பதும் ஆழமான ஆய்வுக்குரியவை.
தமிழினி
₹170 -
வைரவன் லெ. ரா.
பட்டர்-பி
‘..ஒழுகினசேரியின் நீண்ட சுடுகாட்டில் வரிசையாய் சாதிக்கு ஒரு எரிக்குழி. எட்டு அடியில் மண் பீடமாய் நிற்கும் மாசாண சுடலை தான் மொத்த பொறுப்பு. குழியில் சாந்து நிரப்பி உள்ளே எரியும் வைக்கோல் நின்று எரிய வசதியாய் சாந்தின் மேல் தலைமாட்டில், நெஞ்சு, கால்மாட்டில் சிறிதாய் மூன்று கையளவு குழியிட்டனர். அத்தான் மொட்டை போட போகவும், நான் பழையாற்றில் இறங்கி முங்கியெழுந்து படித்துறையில் ஏற, மணி அண்ணன் ஓல்ட் கிங்ஸ் ரம் பாட்டிலை இடப்புறமிருந்த மின்மயான மேடையில் அமர்ந்தபடி […]
யாவரும்
₹150 -
ஆர். காளிப்ரஸாத்
ஆள்தலும் அளத்தலும்
பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு. மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவு நிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள், முரண்கள், குணச்சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப்பிறிதொரு வகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும் செய்நேர்த்தியிலும் கூறு முறையிலும் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன. – எழுத்தாளர் […]
யாவரும்
₹140 -
ராய் மாக்ஸம்
உப்புவேலி
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி. இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது.
தன்னறம்
₹440 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
நாடோடியின் கால்த்தடம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
க. மோகனரங்கன்
அங்கே சொற்களுக்கு அவசியமில்லை
தமிழினி
₹100 -
நாஞ்சில் நாடன்
அம்மை பார்த்திருந்தாள்
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அரை நூற்றாண்டுகாலத் தமிழ் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை நேர்மைத் திறத்துடன் உறுதிப்படத் தொடர்ந்து தன் கதைகளின் வழியாக எழுதிக்காட்டுகிறார் நாஞ்சில் நாடன். தேர்ந்த ஒரு தவசிப்பிள்ளையைப் போல வேண்டிய பதார்த்தத்தில் வேண்டிய சுவைக்காட்டித் திருத்தமாக விளம்பும் நுட்பத்துடன் எழுதுவதால்தான் அவற்றிலுள்ள சீற்றத்தையும் எள்ளலையும் நம்மால் ஒன்றுபோல ரசித்துச் சுவைக்க முடிகிறது -எம். கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹160