2023
Showing 13–24 of 41 results
-
ஜெயமோகன்
படையல் – சிறுகதைத்தொகுப்பு
இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாமானியர் என பல்வேறு தனிமனிதர்கள் சந்தித்த சிக்கல்களையும், அவர்களின் உள்ளங்களையும் ஆராய்கின்றன இவை. வேகமான, தீவிரமான வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள். படையல் அக்காலகட்டத்தின் ஆன்மிக உச்சநிலை ஒன்றைச் சொல்கிறது என்றால் எரிசிதை அக்காலகட்டத்தின் ஆழ்ந்த காதலொன்றைப் பேசுகிறது. மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவல் ஆன்மிகமும் இலக்கியமும் வாழ்க்கையைச் சந்திக்கும் மர்மப்புள்ளி ஒன்றை தொட்டுக்காட்டுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
முனைவர் லோகமாதேவி
ஸாகே – போதையின் கதை – லோகமாதேவி
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபிக்கொட்டை என்று தாவர உலகின் பல ரகசியங்களை, பல புதிய தகவல்களை பேசும் நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
அழகிய மணவாளன், பி.கே.பாலகிருஷ்ணன்
நாவலெனும் கலைநிகழ்வு – பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐரோப்பியப் பெருநாவல்களைப் பற்றிய ரசனையும் ஆய்வும் கொண்டவை இக்கட்டுரைகள். அந்நாவல்களின் உள்ளடக்கம் என்ன என்று பாலகிருஷ்ணன் ஆராயவில்லை. மாறாக அவை எப்படி வாழ்க்கையில் இருந்து கலையை உருவாக்குகின்றன என்று ஆராய்கிறார். ஆகவேதான் பல இலக்கிய விமர்சன அலைகள் வந்து சென்றபிறகும் தொடர்ந்து பயிலப்படும் ஒரு மூலநூலாக இது உள்ளது. சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு நிகரான வாசிப்புத்தன்மையை அளிக்கும் நூல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360 -
ஜெயமோகன், முனைவர் வி.ஆர்.சந்திரன்
கொடுங்கோளூர் கண்ணகி
தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
கன்னியாகுமரி
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட, இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹270 -
விஷால் ராஜா
திருவருட்செல்வி – விஷால் ராஜா
விஷால் ராஜாவின் கதைகளை, தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு என்று வகுக்கலாம். குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில் தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. அந்தத் திருப்பத்தில் நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக வெளிப்படுத்துகின்றன. நமது நிகழ்காலம், நாம் ஒட்டுமொத்தமாக வந்து சேர்ந்திருக்கும் இடம் மற்றும் இருப்பு ஆகியவை மீதான கூர்மையான விழிப்பையும் விமர்சனத்தையும் இந்நூலில் பார்க்கும்போது புதுமைப்பித்தன் நமக்கு அளித்துப்போன நவீனமானதொரு லட்சியம் முழுமையாக நீர்த்துவிடவில்லை என்ற […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280 -
ஜெயமோகன்
பேய் கதைகளும் தேவதை கதைகளும்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
காடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்
அதிகாலையின் பொன்வெயில் போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி, அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்கும் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு. மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிதமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹650 -
ஜெயமோகன்
வெள்ளை யானை
பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே. இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹600 -
ஜெயமோகன்
ரப்பர் – விஷ்ணுபுரம் பதிப்பகம்
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹290 -
சாம்ராஜ்
கொடை மடம் – சாம்ராஜ்
ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் […]
பிசகு வெளியீடு
₹750 -
ஜெயமோகன்
கொற்றவை
கொற்றவை தமிழில் எழுதப்பட்ட நாவல், ஆனால் ஒரு காவியத்தின் வடிவமைப்பும் மொழிநடையும் கொண்டது. இளங்கோ கண்ணகியை ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கூறுகிறார்.ஆனால் கண்ணகி மதுரையை அடைந்தபோது ‘மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள்’ என்று விதந்து பாடுகிறார். கால் மண்ணை அறியாமல் வாழ்ந்தவள் எப்படி மகிடனை பலிகொண்ட கொற்றவையாக ஆனாள்? அந்த வளர்ச்சியை ஐவகை நிலங்களின் வாழ்க்கை வழியாக, சங்கம் மருவிய காலகட்டத்தின் வரலாற்றின் வழியாக பேரோவியமாக தீட்டிக்காட்டும் நாவல் இது. இதன் கதை தமிழும் தோன்றாத, தெய்வங்களும் தோன்றாத தொல்பழங்காலத்தில் தொடங்கி இன்றையகாலம் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900