2023
Showing 25–36 of 41 results
-
ஜெயமோகன்
நாவல் கோட்பாடு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெயமோகன்
பலாக்கொட்டை தத்துவம் – கவிதை – மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
மலையாள நவீன கவிஞர்களில் முக்கியமானவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை . இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் முகமாக அறியப்பட்டவர். வசனத்தை சிறப்பாக கவிதையில் பயன்படுத்திய முன்னோடி. களச்செயல்பாட்டாளர், மனித உரிமைப்போராளி. தீவிரமான விமர்சனமும் அங்கதமும் கொண்ட கவிதைகளை எழுதிய கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய நுட்பமான மென்மையான அழகுணர்வுக்காகவும் புகழப்படுபவர். மலையாள கவிதையில் அலட்டல் இல்லாத ஒரு கூறுமுறையைக்கொண்டுவந்தவர். கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு 2019ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூல். மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன்
வெண்கடல்
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280 -
ஜெயமோகன்
இரவு
இந்த இரவில் இப்புவியில் எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன ! காட்டில் கரிய பெரும் யானைகள் மண்ணுக்குள் எலிகள் நீருக்குள் மீன்கள் பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள் நாளைய புவி இங்கே கரு புகுகிறது நிறைவுடன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் படுக்கிறது இரவு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
நூறு நாற்காலிகள்
”இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை
நம் காலடியில் ஏங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.”
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹50 -
ஜெயமோகன்
கன்னிநிலம்
நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
முன்சுவடுகள்
வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை மிகச்சிறந்த கதைகளுக்குரிய உணர்ச்சிகரத்துடனும் கலையொருமையுடனும் தொகுத்து அளித்திருக்கிறார் ஜெயமோகன். அறம் தொகுதியின் உண்மை மனிதர்களின் கதைகளுக்கு நிகராகவே தீவிரமான உள எழுச்சியை உருவாக்குபவை இவை. வாழ்க்கைமேல் நம்பிக்கையை, செயலாற்றுவதற்கான தூண்டுதலை அளிப்பவை. முன்னால் சென்றவர்களின் காலடிகள் போல தெளிவான வழிகாட்டல்கள் வேறென்ன உள்ளது? அவை அறைகூவல்கள், அறிவுறுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள். மானுடர் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பல்லாயிரம்கோடியென. எஞ்சுவன சில சுவடுகள் மட்டுமே. அவற்றிலுள்ளன ரத்தம், கண்ணீர், வியர்வை. ஒவ்வொன்றும் அருமணிகளை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹240 -
ஜெயமோகன்
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! “ஏழாம் உலகம்” அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220 -
ஜெயமோகன்
வணங்கான்
யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹40 -
செல்வேந்திரன்
மேடைப் பேச்சின் பொன்விதிகள்
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும். நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே, இது அனைவருக்குமான புத்தகம். தோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் வகையராக்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால், ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால், அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில், மேடைகளில் புகழோங்கித் திகழ்வீர்கள்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹170 -
ஜெயமோகன்
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹380