Paperback
Showing 133–144 of 197 results
-
நாஞ்சில் நாடன்
பொலியோ பொலி!
‘வலுத்த கை’ என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்.
தமிழினி
₹280 -
நாஞ்சில் நாடன்
சூடிய பூ சூடற்க
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.
தமிழினி
₹170 -
நாஞ்சில் நாடன்
அம்மை பார்த்திருந்தாள்
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அரை நூற்றாண்டுகாலத் தமிழ் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை நேர்மைத் திறத்துடன் உறுதிப்படத் தொடர்ந்து தன் கதைகளின் வழியாக எழுதிக்காட்டுகிறார் நாஞ்சில் நாடன். தேர்ந்த ஒரு தவசிப்பிள்ளையைப் போல வேண்டிய பதார்த்தத்தில் வேண்டிய சுவைக்காட்டித் திருத்தமாக விளம்பும் நுட்பத்துடன் எழுதுவதால்தான் அவற்றிலுள்ள சீற்றத்தையும் எள்ளலையும் நம்மால் ஒன்றுபோல ரசித்துச் சுவைக்க முடிகிறது -எம். கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹160 -
நாஞ்சில் நாடன்
கருத்த வாவு
‘கருத்த வாவு’ நாஞ்சில் நாடனின் பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு அனைத்துக் கட்டுரைகளும் நடப்பாண்டின் பல்வேறு பருவ இதழ்களில் வெளியானவை. தமிழில் சொற்கள் குறித்த தேடலும் தெளிவும் கொண்டவை. அவர் அறியத்தரும் தமிழின் நேற்றைய சொல்வளம் பெருவியப்பைத் தருகிறது. மொழி இன்றளவும் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சொற்பண்டாரத்தின் சில மணிகள் அவை.தமிழினி
₹230 -
செல்வேந்திரன்
நகுமோ லேய் பயலே
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹135 -
விலாஸ் சாரங்
கூண்டுக்குள் பெண்கள்
நற்றிணை பதிப்பகம்
₹350 -
சத்ஸயி பிஹாரி
நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா
தமிழினி
₹100 -
சுரேஷ் பிரதீப்
உடனிருப்பவன்
முதலிரு தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளையும் ஒரு வருட இடைவெளியில் எழுதி இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் எங்கிற தீர்மானமெதுவும் இல்லை. இயல்பாக அப்படி அமைந்துவிடுகிறது. ‘விஷச்சுழல்’ என்ற இத்தொகுப்பின் கடைசி கதையை எழுதிய பிறகு ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து வெளியேறிவிட்டதான உணர்வு தோன்றியது. பக்க அளவு கதைகளின் எண்ணிக்கை போன்றவற்றைவிட இத்தகையதொரு முழுமையுணர்வே கதைகளை தொகுப்பதற்கான அளவீடாகக் கொள்கிறேன். – சுரேஷ் பிரதீப்
யாவரும்
₹150 -
சுனில் கிருஷ்ணன்
மரணமின்மை எனும் மானுடக்கனவு
நலமான வாழ்வுக்கு வழிகாட்டும் எளிய யோசனைகள் கொண்ட மருத்துவப் புத்தகங்கள் ஏராளம். அவற்றை தொடாமல் ஆயுர்வேதத்தின் நடைமுறை சிக்கல்கள், பண்பாட்டு வேர்கள், வரலாற்றுப் பரிணாமங்களை தொட்டுப் பேசும் நூல்கள் தமிழில் அரிது. இந்நூல் அந்த இடைவெளியை நிரவும் சிறு முயற்சி.
யாவரும்
₹220 -
போகன் சங்கர்
மர்ம காரியம்
தமிழினி
₹220 -
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125 -
செல்வேந்திரன்
பாலை நிலப் பயணம்
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று
– ஜெயமோகன்
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹120