Paperback
Showing 145–156 of 197 results
-
லக்ஷ்மி மணிவண்ணன்
வெள்ளைப் பல்லி விவகாரம்
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது.
வெயிலாள் டிரேடர்ஸ்
₹120 -
சு. வேணுகோபால்
கூந்தப்பனை
வேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் அவன் மனதில் மறைந்திருக்கும் கருமையைத் தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதை மாந்தர்கள் இலட்சிய […]
தமிழினி
₹160 -
ஜெயமோகன்
அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்
சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.
கிழக்கு பதிப்பகம்
₹155 -
ஸ்ரீனிவாச வைத்யா
ஓடை
வாசிப்பு ஒரு சிரமமான அனுபவம் என்று ஆகிவிட்ட சமீப நாட்களில், ஸ்ரீனிவாச வைத்யாவின் “ஹள்ள பந்து ஹள்ள“ புனைகதை, மாறுபட்ட உற்சாகமான வாசிப்பின் அனுபவத்தைக் கொடுக்கிறது. வைத்யா அழகாகக் கதை சொல்கிறார். குடும்பக் கதையைச் சொன்னாலும், அத்துடன் நாட்டின் கதையும் சேர்ந்துகொள்கிறது. இது சமுதாய மாற்றத்தின் தொகுப்பாகவும் இருப்பதால், கதை பன்முக வடிவங்களைப் பெற்றுவிடுகிறது.
சாகித்ய அகாதெமி
₹260 -
பூர்ணசந்திர தேஜஸ்வி
சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம்: கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலுள்ள கெசீரூர் அழகான ஒரு சிறு கிராமம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் ஏலக்காயைச் சுற்றியே அமைகின்றன. பிரச்சனைகளும் ஏலக்காய் காரணமாகவே எழுகின்றன. எழுந்த பிரச்சனைகளைப் பற்றித் துப்புதுலக்க ஒரு புலனாய்வு அதிகாரி வருகிறார். நாடோடி மக்களின் வாழ்க்கை முறை, கல்லூரி மாணவர்களின் உற்சாகம், ஊரின் ஒவ்வொரு சந்திலும் நெளிந்து திரியும் வகுப்புவாத அரசியல் நச்சுப்பாம்பு, மனசாட்சியுள்ள, ஆனால் தெளிவில்லாத அறிவு ஜீவிகள், […]
சாகித்ய அகாதெமி
₹250 -
கி.ராஜநாராயணன்
நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்
சாகித்ய அகாதெமி
₹1150 -
மமாங் தய்
கருங்குன்றம்
லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங்காலமாக இருந்துவரும் உரிமைகளையும், சுதந்திர வாழ்வையும் ஒருசேரப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் நடுவிலும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சிலர் துணைபோவதால் இனக் குழுக்களிடையே மூளும் மோதல்களுடன் ஆழ்ந்த காதலும் முகிழ்க்கிறது. வடகிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் […]
சாகித்ய அகாதெமி
₹290 -
தர்மானந்த கோசாம்பி
பகவான் புத்தர்
உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் துறந்து மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண முயன்று வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவியது. நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீகாரில் உள்ள கயை என்ற இடத்தில் அரசமரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். அதனால் அது போதிமரம் என்று பெயர் பெற்றது. பின்னர் குசிநகரா என்ற இடத்தில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார். இந்நூல் […]
சாகித்ய அகாதெமி
₹270 -
யு.எ.காதர்
திற்கோட்டூர் நாவல்கள்
8- நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பான ‘திற்கோட்டூர் நாவல்கள்’ ‘திற்கோட்டூர்’ என்ற கிராமத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. தற்போதைய நவீனப் போக்குகளிலிருந்து விலக, அவரது கிராம மக்களின் வாய் மொழியில் மக்களின் நம்பயகை, பழக்க வழக்கங்கள் வடக்கு மலபாரில் நடைபெறும் -கோயில் கொடை முதலியவற்றை மிகவும் தத்ரூபமாகக் கற்யனை கலக்காமல் எழுதி வருகிறார். யு.எ.காதரின் இலக்கியப் படைப்புகள் வரலாற்று, மொழிரீதியாகப் பெரும் சேவை புரிகின்றன. வாசகர்களுக்குப் பழைமையான கேரளத்தின் உண்மையான சித்திரம் இவற்றின் மூலம் கிடைக்கிறது.
சாகித்ய அகாதெமி
₹175 -
அப்பூரி சாயாதேவி
அவளது பாதை
சாகித்ய அகாதெமி
₹165 -
எஸ்.எல்.பைரப்பா
பருவம்
பருவம்: மகாபாரதப் பெரும்போரை மையமாக வைத்துக் கற்பனையாகப் புனையப்பட்டது இந்நாவல். மகாபாரதத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சிகளையும் சாகசங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகுகிறார் இக்கதையாசிரியர்.
சாகித்ய அகாதெமி
₹650 -
வி.கெ.என்
பையன் கதைகள்
சாகித்ய அகாதெமி
₹365