Paperback
Showing 169–180 of 197 results
-
லலிதாம்பிகா அந்தர்ஜனம்
அக்கினி சாட்சி
கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, வழிபாடு, சடங்குகளைச் செய்து கொண்டு வாழ்பவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு நம்பூதிரியின் மனைவி, அங்கிருந்த அடக்குமுறைகள் பிடிக்காமல், கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீடு வருகிறாள். நம்பூதிரி குடும்பம் அவளை ஒதுக்கி வைக்கிறது. எனினும் அந்தப் […]
சாகித்ய அகாதெமி
₹100 -
எம்.டி.வாசுதேவன் நாயர் (M.D.Vasudevan Nair)
இரண்டாம் இடம்
ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் ‘கங்குலியின் பரதம்’ மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத்திரங்களால் படைத்து பீமனின் பார்வையில் பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்பு தன்மையாகும். இதுவரையில் படித்துள்ள மகாபாரத கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபட்டுள்ள […]
சாகித்ய அகாதெமி
₹320 -
யுவன் சந்திரசேகர்
இதுவும்தான் அதுவும்தான் – யுவன் சந்திரசேகர்
ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை, புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் கனவு என்றும் ஒப்பிட்டு எழுதினேன். உறக்கத்தின் மடியில் தன்னிலையை முழுக்க உதிர்த்த பிறகு நிகழ்கிற கனவே கவிதை. நிகழும்போதே பதிவு செய்யப்பட்ட கனவு. உருவமும் உள்ளடக்கமும் தனித்தனியாகத் தெரியக் கூடாத மாயவடிவம். கவிஞனின் சாதாரண அனுபவத்தைவிட, சாதாரணனின் கவிதானுபவம் பொருட்படுத்தத்தக்கது – இந்தக் கவிதைகளில் அதை நிகழ்த்திப் பார்க்கவே முயன்றிருக்கிறேன். எம். யுவன்
காலச்சுவடு
₹150 -
யுவன் சந்திரசேகர்
நிலவைச்சுட்டும் விரல் – யுவன் சந்திரசேகர்
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது. காலச்சுவடு இதழில் தொடர் பத்தியாக வெளியான கட்டுரைகளுடன் புதிதாகஎழுதப்பட்டவையும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு. யுவன் சந்திரசேகர்
காலச்சுவடு
₹270 -
ஆன்டன் செக்காவ், எம்.கோபாலகிருஷ்ணன்
பேட்ச் எனும் நாய்க்குட்டி
நூல் வனம்
₹50 -
எம்.கோபாலகிருஷ்ணன், கதே
காதலின் துயரம்
நாவலிலிருந்து சில வரிகள்…. இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். […]
தமிழினி
₹180 -
ஜெயமோகன்
The Abyss – ஏழாம் உலகம் ஆங்கிலத்தில் (Paperback)
Pothivelu Pandaram is known as a successful and God-fearing man about town – he has a loyal wife, three daughters and ample money to pay for their dowries. However, it is an open secret that his success is fuelled by a tawdry yet deeply profitable trade – for he owns a group of physically deformed […]
Juggernaut
₹699 -
க. மோகனரங்கன்
கல்லாப் பிழை
எழுத்தறிவித்தல்
முன் நடந்தவர்கள்
பதித்த தடத்தில்
எவரெவரோ
ஏற்றிவைத்த
விளக்குகளின்
வெளிச்சத்தில்தான்
இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்…
தமிழினி
₹100 -
சுனில் கிருஷ்ணன்
சமகால சிறுகதைகளின் பரிணாமம்
என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
யாவரும்
₹320 -
நரோபா
எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது
எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். […]
யாவரும்
₹150 -
சா. ராம்குமார்
அகதி
தமிழனி பதிப்பகம் வெளியிட்டுள்ள ராம்குமாரின் அகதி தொகுப்பில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. உறவுகளுக்கிடையிலான ஊசலாட்டம், தன்னகங்காரம்/பாவனை அழியும் கணம், அரசாங்க பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்வு, மனிதர்களின் கீழ்மை மற்றும் கொண்டாட்டம் என பல வகைப்பட்டக் கதைகள். கதைகள் ராம்குமாரின் எளிய நேரடியான கதை சொல்லல் முறையில் எங்கும் துருத்தாமல் செல்கின்றன.
தமிழினி
₹160 -
நரேன்
இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்
யாவரும்
₹350