Paperback
Showing 37–48 of 197 results
-
ஜெயமோகன்
படையல் – சிறுகதைத்தொகுப்பு
இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாமானியர் என பல்வேறு தனிமனிதர்கள் சந்தித்த சிக்கல்களையும், அவர்களின் உள்ளங்களையும் ஆராய்கின்றன இவை. வேகமான, தீவிரமான வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள். படையல் அக்காலகட்டத்தின் ஆன்மிக உச்சநிலை ஒன்றைச் சொல்கிறது என்றால் எரிசிதை அக்காலகட்டத்தின் ஆழ்ந்த காதலொன்றைப் பேசுகிறது. மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவல் ஆன்மிகமும் இலக்கியமும் வாழ்க்கையைச் சந்திக்கும் மர்மப்புள்ளி ஒன்றை தொட்டுக்காட்டுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
மலைபூத்தபோது
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழுச்சிகளை, வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை. புன்னகைக்க வைக்கும், கற்பனை விரியச்செய்யும், வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம், அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
ஈராறுகால்கொண்டெழும் புரவி
என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறுகால் கொண்டெழும் புரவி. சித்தர்ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தைச்சேர்ந்ததாக உள்ளது. இவை சென்ற காலங்களில் நான் தங்கி மீண்டும் முன் சென்ற புள்ளிகள் என்று சொல்வேன். – ஜெயமோகன
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹170 -
ஜெயமோகன்
பொலிவதும் கலைவதும்
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
நத்தையின் பாதை
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில், அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன. பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை, […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
முனைவர் லோகமாதேவி
ஸாகே – போதையின் கதை – லோகமாதேவி
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபிக்கொட்டை என்று தாவர உலகின் பல ரகசியங்களை, பல புதிய தகவல்களை பேசும் நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
ஜெயமோகன்
எழுதும் கலை – தமிழினி
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
தமிழினி
₹140 -
ஜெயமோகன்
விசும்பு – அறிவியல் புனைகதைகள்
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹170 -
அழகிய மணவாளன், பி.கே.பாலகிருஷ்ணன்
நாவலெனும் கலைநிகழ்வு – பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐரோப்பியப் பெருநாவல்களைப் பற்றிய ரசனையும் ஆய்வும் கொண்டவை இக்கட்டுரைகள். அந்நாவல்களின் உள்ளடக்கம் என்ன என்று பாலகிருஷ்ணன் ஆராயவில்லை. மாறாக அவை எப்படி வாழ்க்கையில் இருந்து கலையை உருவாக்குகின்றன என்று ஆராய்கிறார். ஆகவேதான் பல இலக்கிய விமர்சன அலைகள் வந்து சென்றபிறகும் தொடர்ந்து பயிலப்படும் ஒரு மூலநூலாக இது உள்ளது. சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு நிகரான வாசிப்புத்தன்மையை அளிக்கும் நூல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360 -
அறிவு – தன்னறம்
அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த தனிச்சிறந்த ஆய்வியல் சிறுநூல், எழுத்தாளுமை எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் தமிழில் செழுமையுற மொழிபெயர்க்கப்பட்டு, தன்னறம் நூல்வெளி […]
தன்னறம்
₹80 -
ஜெயமோகன்
நலமறிதல் – தன்னறம்
நோய் என்பது உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. மருந்து உண்ணலாம். ஆனால் அம்மருந்தும் உணவாகவே இருக்க வேண்டும். உணவல்லாத எதையுமே உண்ணலாகாது. உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன் நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற் மும் வேகமும் உற்சாகமும் […]
தன்னறம்
₹200 -
ஜெயமோகன்
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500