Paperback
Showing 49–60 of 197 results
-
ஜெயமோகன்
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
ஜெயமோகன்
கண்ணீரைப் பின்தொடர்தல்
இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு, அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
நான்காவது கொலை…!!!
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹160 -
ஜெயமோகன், முனைவர் வி.ஆர்.சந்திரன்
கொடுங்கோளூர் கண்ணகி
தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
கன்னியாகுமரி
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட, இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹270 -
ஜெயமோகன்
வணிக இலக்கியம்
இலக்கியம் வணிகஎழுத்து இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்துகொள்வது இலக்கிய வாசிப்புக்கு இன்றியமையாதது. அத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒருவர் இலக்கியப்படைப்பை அறியவே இயலாது. அவர் வணிக எழுத்துக்கான பொதுவான வாசிப்பை இலக்கியத்தின்மேல் போடுவார். அது விழிகளை மூடிவிட்டு ஓவியத்தை தடவிப்பார்த்து அறிய முயல்வது போல. இந்நூல் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கிறது. வணிக எழுத்தை திட்டவட்டமாக அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இலக்கியவாசகர்கள் எவருக்கும் இன்றியமையாத புரிதலை அளிக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹130 -
விஷால் ராஜா
திருவருட்செல்வி – விஷால் ராஜா
விஷால் ராஜாவின் கதைகளை, தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு என்று வகுக்கலாம். குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில் தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. அந்தத் திருப்பத்தில் நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக வெளிப்படுத்துகின்றன. நமது நிகழ்காலம், நாம் ஒட்டுமொத்தமாக வந்து சேர்ந்திருக்கும் இடம் மற்றும் இருப்பு ஆகியவை மீதான கூர்மையான விழிப்பையும் விமர்சனத்தையும் இந்நூலில் பார்க்கும்போது புதுமைப்பித்தன் நமக்கு அளித்துப்போன நவீனமானதொரு லட்சியம் முழுமையாக நீர்த்துவிடவில்லை என்ற […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280 -
ஜெயமோகன்
பேய் கதைகளும் தேவதை கதைகளும்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
உரையாடும் காந்தி – தன்னறம்
முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் […]
தன்னறம்
₹300 -
ஜெயமோகன், விவேக் ஷன்பேக்
வேங்கைச்சவாரி – தமிழில் ஜெயமோகன் வம்சி
கன்னட மொழியின் முதன்மையான இளைய தலைமுறை எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல், இலக்கியவிமரிசனம் மற்றும் நாடகத்துறையில் புகழ் பெற்றவர். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருது, 1998க்கான சிவராம் காரந்த்விருது ஆகியவற்றை பெற்றவர்.
இக்கதைகளில், நவீன கர்நாடகப் பண்பாட்டின் பல்வேறு அடையாளச் சிக்கல்களையும் உலகமயமாக்கலின் பிரச்சினைகளையும் விவாதிப்பதின் வழியாக தன் தரிசனங்களை அடைந்திருக்கிறார் விவேக்.
அபாரமான வாசிப்புத்தன்மைக் கொண்ட இக்கதைகள் வாசகன் கடந்து செல்லவேண்டிய நுண்ணிய மறுபக்கங்களும் உடையவை.
– ஜெயமோகன்வம்சி புக்ஸ்
₹100 -
ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஹெச். எஸ். சிவபிரகாஷ்
குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்
எனக்கு ஏன் குரு தேவையாகிறார்? நான் ஏன் தியானம் பழகவேண்டும்? மந்திரங்களினால் என்ன பயன்? ஆன்மீகப் பயிற்ச்சியில் சுவாசம் ஏன் முக்கியமாகிறது? ஆன்மீகப் பாதையில் பாலியலின் இடம் என்ன? அமைதியற்ற மனதை என்ன செய்ய? தன்னையும் உலகையும் புருந்து கொள்வதற்கான இத்தகைய அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிறது குரு. வாயில்கள் எனும் உருவகம் மூலமாக, வாசகர் வெவ்வேறு ‘அறை’களுக்குள் வரவேற்கப்படுகிறார். ஒவ்வொரு அறையிலுமுள்ள ஆன்மீக மெய்மைகளை ஆராயவும் உணரவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியில், இந்த ஆன்மீகக் கருத்துகள் எவ்வாறு […]
நற்றிணை பதிப்பகம்
₹130 -
ஜெயமோகன்
யதி : தத்துவத்தில் கனிதல்
தன்னறம்
₹500