அபுனைவு
Showing 25–36 of 63 results
-
ஜெயமோகன்
உரையாடும் காந்தி – தன்னறம்
முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் […]
தன்னறம்
₹300 -
ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஹெச். எஸ். சிவபிரகாஷ்
குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்
எனக்கு ஏன் குரு தேவையாகிறார்? நான் ஏன் தியானம் பழகவேண்டும்? மந்திரங்களினால் என்ன பயன்? ஆன்மீகப் பயிற்ச்சியில் சுவாசம் ஏன் முக்கியமாகிறது? ஆன்மீகப் பாதையில் பாலியலின் இடம் என்ன? அமைதியற்ற மனதை என்ன செய்ய? தன்னையும் உலகையும் புருந்து கொள்வதற்கான இத்தகைய அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிறது குரு. வாயில்கள் எனும் உருவகம் மூலமாக, வாசகர் வெவ்வேறு ‘அறை’களுக்குள் வரவேற்கப்படுகிறார். ஒவ்வொரு அறையிலுமுள்ள ஆன்மீக மெய்மைகளை ஆராயவும் உணரவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியில், இந்த ஆன்மீகக் கருத்துகள் எவ்வாறு […]
நற்றிணை பதிப்பகம்
₹130 -
ஜெயமோகன்
யதி : தத்துவத்தில் கனிதல்
தன்னறம்
₹500 -
ஜெயமோகன்
நாவல் கோட்பாடு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹120 -
ஜெயமோகன்
இலக்கிய முன்னோடிகள் – நற்றிணை
இவை இலக்கிய முன்னோடிகளைப் பற்றிய முடிவுகள் அல்ல; தீர்ப்புகள் அல்ல; ஒரு வாசகனின் அவதானிப்புகள் மட்டுமே. பிற வாசகர்கள் இந்தக் கண்களினூடாகப் பார்க்கையில் இன்னும் சற்று விரிவான வாசிப்பை அடையக்கூடும். இப்படி பல்வேறு கண்கள் வழியாகப் பார்க்கப்படுகையிலேயே இலக்கிய வாசிப்பு முழுமையை நோக்கிச் செல்கிறது. இலக்கியவாதி மேலும் மேலும் காலத்தில் தெளிந்து வருகிறான். இந்நூலின் நோக்கம் இதுவே.
– ஜெயமோகன்நற்றிணை பதிப்பகம்
₹750 -
ஜெயமோகன்
ஞானி
மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை. ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர். ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனைத் தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
சொல்லிமுடியாதவை
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
நற்றிணை பதிப்பகம்
₹180 -
ஆனந்த குமாரசுவாமி (Anandha Kumaraswamy)
இந்தியக் கலையின் நோக்கங்கள்
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரசுவாமி விட்ட இடத்திலிருந்து தாகூர் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். எனினும் தாகூர் அவ்வளவாக முன்னால் செல்லவில்லை. தாகூர் எழுத்தின்வழி மட்டுமே செயல்பட்டார். ஆனால், குமாரசுவாமி ஒரு முழுமையான எழுத்தாளருக்கும் மேலானவராக, பண்பாட்டு வரலாற்றாய்வாளராகவும் இருந்தார். தொல்நூல்கள் மற்றும் அழகியல் சார்ந்து மட்டுமல்லாமல், வரலாற்றின் பிற அம்சங்கள், […]
அழிசி
₹130 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
தனிவழிப் பயணி
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது
அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
ஜெயமோகன்
முன்சுவடுகள்
வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை மிகச்சிறந்த கதைகளுக்குரிய உணர்ச்சிகரத்துடனும் கலையொருமையுடனும் தொகுத்து அளித்திருக்கிறார் ஜெயமோகன். அறம் தொகுதியின் உண்மை மனிதர்களின் கதைகளுக்கு நிகராகவே தீவிரமான உள எழுச்சியை உருவாக்குபவை இவை. வாழ்க்கைமேல் நம்பிக்கையை, செயலாற்றுவதற்கான தூண்டுதலை அளிப்பவை. முன்னால் சென்றவர்களின் காலடிகள் போல தெளிவான வழிகாட்டல்கள் வேறென்ன உள்ளது? அவை அறைகூவல்கள், அறிவுறுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள். மானுடர் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பல்லாயிரம்கோடியென. எஞ்சுவன சில சுவடுகள் மட்டுமே. அவற்றிலுள்ளன ரத்தம், கண்ணீர், வியர்வை. ஒவ்வொன்றும் அருமணிகளை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹240 -
Sale!
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
இரவிலி நெடுயுகம் – கவிஞர் அபி
தமிழின் புதுக்கவிதை மரபில் முன்னோடிகளில் ஒருவரின் இடம் கொண்டவர் அபி. தமிழ் அருவக்கவிதைகளில் நகுலன், பிரமிள் ஆகியோருக்குப்பின் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியவர். தூய அருவக்கவிதைகள் என்னும் வகைமைக்குள் அமையும் முக்கியமான படைப்புக்களை உருவாக்கியவர். கலீல் கிப்ரானின் பாதிப்புடன் எழுதத்தொடங்கிய அபி தனக்கென மொழியையும் வெளிப்பாட்டுமுறையையும் உருவாக்கிக்கொண்டார். காலம், வெளி குறித்த தரிசனங்களை, புறவுலக உணர்வுகளின் வழியாக வெளிப்படுத்தும் அவருடைய கவிதைகள் ஆழ்ந்த தியானவெளிப்பாடுகள்.
அபி (பீ.மு.அபிபுல்லா) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தேனி மாவட்டத்தில் பிறந்து மதுரையில் வாழ்கிறார். 2019ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அபிக்கு வழங்கப்பட்டதை ஒட்டி வெளிவருவது இந்நூல்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹10020%