அபுனைவு
Showing 37–48 of 63 results
-
ஜெயமோகன்
சிலுவையின் பெயரால்
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன. என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
வலசைப் பறவை
ஜெயமோகன் தன் தளத்தில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுதி இது. “நான் இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன். அதை ஒரு மத நம்பிக்கையாக அல்ல. ஒரு நடைமுறை வாய்ப்பாகவே கருதுகிறேன். மாபெரும் மானுடப்பரவல் கொண்ட இந்த நாடு ஒன்றாக இருந்தாலொழிய வளர முடியாது. பிரிந்தால் குருதிப்பெருக்கே எஞ்சும் என நம்புகிறேன். ஆகவே முதன்மையாக பிரிவினை அரசியல் பேசி சுயலாபம் தேடும் குழுக்களை, ஐந்தாம் படையினராகச் செயல்படும் அறிவுஜீவிகளையே முதன்மையாக எதிர்கொள்கிறேன். தமிழ் அறிவுப்புலத்தில் மிகப்பெரிய சக்திகள் இவர்களே. மற்றபடி என் எதிர்வினைகள் எல்லாமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பொதுக் குடிமகனுடையவை மட்டுமே. சாமானியனாக நின்று வரலாற்றை நோக்குவதே என் வழி” என்று ஜெயமோகன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
நற்றிணை பதிப்பகம்
₹125 -
ஜெயமோகன்
ஒருபாலுறவு
தமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் இணைய ஊடகம் வந்த பின்னரே தெரியவந்தது. ஜெயமோகனின் இணையதளத்தில் வந்த கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட இத விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன.
”என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது. நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை” என்று ஜெயமோகன் இவ்வுரையாடலைத் தொகுக்கும்போது குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹90 -
செல்வேந்திரன்
மேடைப் பேச்சின் பொன்விதிகள்
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும். நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே, இது அனைவருக்குமான புத்தகம். தோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் வகையராக்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால், ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால், அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில், மேடைகளில் புகழோங்கித் திகழ்வீர்கள்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹170 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சீ. முத்துசாமி – மலேசிய நவீனத் தமிழிலக்கிய முன்னோடி
நவீன மலேசியத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் சீ. முத்துசாமி. அழகியலுடன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதியவர். நவீனத் தமிழிலக்கியத்தின் செழுமைமிக்க மரபை தானும் கொண்டவர், மலேசியத்தமிழிலக்கியம் இன்று வீறுகொண்டு எழுந்திருக்கும் சூழலில் சீ. முத்துசாமி பெரிதும் கவனிக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தோட்டக்கூலிகளாகச் சென்று புதிய சூழலில் கண்ணீரும் குருதியும் சிந்திப் போராடி இன்று மெல்ல தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நெடிய வரலாற்றின் கலைரீதியான பதிவுகள் அவருடைய ஆக்கங்கள்.
2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கியவிருது சீ. முதுசாமிக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சனத்தொகுப்பு இந்நூல். விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பை ஆற்றிய முன்னோடிப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹80 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சுரேஷ்குமார் இந்திரஜித் – வளரும் வாசிப்பு
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர் சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையரை செய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடத்தனம் இருக்காது.
நிகழ்வுகள் இருக்கும் கதை இருக்காது ஆனால் இந்த சித்தரிப்புகள் வழியாக எப்போதும் வாழ்க்கையின் ஒரு துண்டை அவர் வெட்டி எடுத்துவைக்கிறார். ஆகவே அவை கலைப்படைப்புகளாக ஆகின்றன.
2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமாருக்கு வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹100 -
ஜெயமோகன்
நாளும் பொழுதும்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்.
நற்றிணை பதிப்பகம்
₹170 -
ஜெயமோகன்
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹380 -
ஜெயமோகன்
வாழ்விலே ஒரு முறை
இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கையில் நிகழ்ந்தவை, கற்பனையில் தொகுக்கப்பட்டு மையம் கண்டடையப்பட்டவை. அமைப்பில் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவே நிற்பவை. உணர்ச்சிகரமானவை, கதைக்கான ஒழுக்கும் ஓட்டமும் கொண்டவை, ஆனால் தங்களை கட்டுரையென்றே முன்வைப்பவை ”அறம் போன்ற கதைகளில் மாமனிதர்களைப் பற்றிச் சொன்னேன். இக்கதைகள் எளிய மனிதர்களின் கதைகள். கதை என்றவகையில் அவர்களுள் எந்த வேறுபாடுமில்லை. மனிதர்களை கருவாக்கி இங்கே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் மாபெரும் கதை ஒன்று உள்ளது. அதன் ஒரு சிறுமூலையை தன் உயிர்ச்சத்தால் பின்னி விரிக்கும் சிறு […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹180 -
செல்வேந்திரன்
பெரும் வெற்றுக்காலம்
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்… இப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும். தனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை – எல்லாம் எதிர்மறை. செல்வேந்திரன் எழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை. தனது கதை போல் செல்வேந்திரன் சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். இந்தப் புத்தகம் இரண்டாம் முறை படிக்கவும் பத்திரம் ஆகும்.
– ரமேஷ் வைத்யா
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹130 -
சியமந்தகம் குழுவினர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ஜெயமோகன் 60 – சியமந்தகம்
ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.
அழிசி
₹900 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
அந்தர கவி
ஜனவரி 22, 2022 அன்று கவிஞர் அபியின் எண்பது அகவை நிறைவை ஒட்டி மலராக வெளிவரும் ‘எண்பது ஆண்டு சிறப்பு மலர்’ தொகுப்பு இந்நூல். இந்நூல் ஒரு வகையில் விமர்சன நூலும் கூட. அபியின் எண்பதாவது வயதில் அவரது மாணவர்கள், இலக்கிய வாசகர்கள், அவருக்கு பின்பான மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். கட்டுரையாளர்கள் இந்நூலின் வழி அபியின் கவிதையையும், ஆளுமையையும் அணுகியறிகின்றனர். அபி என்னும் பெருங்கவிஞன் எப்படி முதன்மையான பேராசிரியராக விளங்கினார் என்னும் சித்திரம் இந்நூலின் வழி வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அபியை பற்றிய மதிப்பீடுகளையையும், ரசனைகளையும் எழுதியுள்ளனர். பலதரப்பட்ட தரப்பிலிருந்து அபியை அணுகி அறிந்து எழுதப்பட்ட நூல் இது. அபியின் கவி உலகைப் பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்குகிறது இந்நூல்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹180