2022
Showing 37–48 of 53 results
-
சியமந்தகம் குழுவினர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ஜெயமோகன் 60 – சியமந்தகம்
ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.
அழிசி
₹900 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
அந்தர கவி
ஜனவரி 22, 2022 அன்று கவிஞர் அபியின் எண்பது அகவை நிறைவை ஒட்டி மலராக வெளிவரும் ‘எண்பது ஆண்டு சிறப்பு மலர்’ தொகுப்பு இந்நூல். இந்நூல் ஒரு வகையில் விமர்சன நூலும் கூட. அபியின் எண்பதாவது வயதில் அவரது மாணவர்கள், இலக்கிய வாசகர்கள், அவருக்கு பின்பான மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். கட்டுரையாளர்கள் இந்நூலின் வழி அபியின் கவிதையையும், ஆளுமையையும் அணுகியறிகின்றனர். அபி என்னும் பெருங்கவிஞன் எப்படி முதன்மையான பேராசிரியராக விளங்கினார் என்னும் சித்திரம் இந்நூலின் வழி வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அபியை பற்றிய மதிப்பீடுகளையையும், ரசனைகளையும் எழுதியுள்ளனர். பலதரப்பட்ட தரப்பிலிருந்து அபியை அணுகி அறிந்து எழுதப்பட்ட நூல் இது. அபியின் கவி உலகைப் பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்குகிறது இந்நூல்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹180 -
நாஞ்சில் நாடன்
நீரின் திறவுகோல்
தமிழினி
₹190 -
அரவிந்த் சுவாமிநாதன்
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – 2
தமிழின் நவீனச் சிறுகதை என்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’, 1915-இல், ‘விவேகபோதினி’யின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் இதழ்களில் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே திருமணம் செல்வகேசவராய முதலியார், பாரதியார் போன்றோரது சிறுகதைகள் வெளியாகிவிட்டன. ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்பே, 1892 முதல் வெளியான ‘விவேக சிந்தமாணி’ மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன.. நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம். கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு […]
யாவரும்
₹550 -
வைரவன் லெ. ரா.
ராம மந்திரம்
யாவரும்
₹180 -
சுஷில் குமார்
அடியந்திரம்
சுஷில் குமாரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மட்டும் வேரூன்றிய மாந்தர்களின் நம்பிக்கையை, பயத்தை, மீட்சியை, அலைகழிப்பை அவற்றின் இயல்பிலேயே சொல்லிப் போவதாகத் தோன்றலாம். சில சமயங்களில் அதீதங்களின் வெளிப்பாடாகவும் தெரியலாம். ஆனால் அவரது கதையுலகின் பாதாள நதியின் ஈரம் ஒரு பெரும் சமூகத்தின் வெவ்வேறு நிலங்களை நனைத்தபடியே செல்வதை கண்டடைய முடியும். கதவில்லா கூண்டை தேர்ந்தெடுக்கும் பறவையின் சுதந்திரத்தை கைக்கொள்ளும் அந்த ஈரமே சுஷில் குமாரின் கதைக்களமாகத் திகழ்கிறது.
யாவரும்
₹220 -
நாஞ்சில் நாடன்
பொலியோ பொலி!
‘வலுத்த கை’ என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்.
தமிழினி
₹280 -
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125 -
லக்ஷ்மி மணிவண்ணன்
வெள்ளைப் பல்லி விவகாரம்
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது.
வெயிலாள் டிரேடர்ஸ்
₹120 -
எம்.கோபாலகிருஷ்ணன்
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, இந்திக் கவிதையுலகை அறிந்துக்கொள்வதற்கான ஒரு சாளரம்.
நூல் வனம்
₹330 -
சுனில் கிருஷ்ணன்
சமகால சிறுகதைகளின் பரிணாமம்
என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
யாவரும்
₹320 -
சு. வேணுகோபால்
கவிதைத் திறனாய்வு வரலாறு
தமிழினி
₹550